வணிக இலாபத்திற்காக தண்ணீரா? ஆர்பாட்டம்!!

 வணிக இலாபத்திற்காக தண்ணீரா? ஆர்பாட்டம்!!

எம்.ரபிக் ராஜா,

 பெரியகுளம் பகுதியில் ஒரு சிலரிம் வணிக இலாபத்திற்காக, சோத்துப்பாறை அணையில் இருந்த நீரானது முழுவதும் வெளியேற்றப்பட்டதால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்க கோரியும், ஒரு சிலரின் வணிக இலாபத்திற்காக செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய அரசு ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் பெரியகுளம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக பெரியகுளம் தென்கரை பேருந்து நிறுத்தம் அருகே தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போரட்டத்திற்கு பெரியகுளம் நகர தலைவர் நாகூர் கனி தலைமை வகித்தார்,

  தேனி மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது, மாவட்ட பொருளாளர் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் பரித்,

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தலைவர் கணவாபீர், சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஹிதாயத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், இனப்பிரச்சினைக்கு இரு நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர், அதை தொடர்ந்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

  இருநாட்களில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனில் போராட்டம் இன்னும் வீரியமாக நடைபெறும் என்று அக்  கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

   இப்போராட்டத்தில்  நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.