பன்றிகள் ஸ்பெஷல்!

முபாரக்,
வர, வர, வேலூர் மாவட்டம் பன்றிகள் ஸ்பெஷல் மாவட்டம் என்று பெயர் பெற்று வருகிறது.
ஏற்கனவே வேலூர், சத்துவாச்சாரி, அலுமேலுமங்காபுரம், காட்பாடி போன்ற பகுதிகளின் வீதிகளில் பன்றிகள் கூட்டம் ஹாயாக சுற்றித்திரிகிறது.
இது குறித்து புகார்கள் சென்ற போதெல்லாம் பன்றிகளை பிடித்த மாதிரி பொய் செய்தி அளிக்கும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அதில் கூட செலவு கணக்கு எழுதி குடும்பத்தைக் காப்பாறுகிறார்கள்.
பன்றிகளின் உரிமையாளர்களிடம் சொல்லி பன்றிகளை பிடித்து போகச் சொல்லிவிட்டு, மாநகராட்சி சார்பாக பிடித்து காட்டில் விட்ட மாதிரி ஜோடிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது குடியாத்தம்,பாவடாம் தோப்பு"செல்லியம்மன் கோயில்அருகில்"பன்றிகள், வந்து சென்றுக் கொண்டிருக்கின்றன.
தொற்று நோய்களுக்கு ஏற்ற இந்த மழைக்காலத்தில் பன்றி பிடிக்கும் வே லையையாவது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் செய்தால் நலம் என்கிறார்கள் மக்கள்.