ஹலோ திருப்பத்தூர் நகராட்சி கமிஷனர் சார்!! இதையும் கொஞ்சம் கவனியுங்கள் ப்ளீஸ்!

ஜி.கே.சேகரன்,
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டிறைச்சி கூடத்திலிருந்து தண்ணீர் சப்ளையாகிறது - திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட நவீன ஆடு இறைச்சி கூடத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு ஆடு இறைச்சி வியாபாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத நகராட்சி ஆணையர். உயிர் சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை.
திரும்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ராஜன்தெரு பகுதியில் உள்ள திரு சி.எம். சுப்பிரமணி நாயுடு வளாகத்தில் நவீன ஆடு இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த நவீன ஆடு இறைச்சி கூடத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சி கடைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நவீன ஆடு இறைச்சி கூடம் செயல்பட்டு வரும் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சி திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.
மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியும் பழுதடைந்து குடிநீரும் அசுதமாக உள்ளது. அதேபோல் ஆடு இறைச்சியின் கழிவுகள் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாயும் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் செல்லவழி இல்லாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வருவதாக ஆட்டு இறைச்சி வியாபாரிகள் புலம்புகின்றனர்.
அதேபோல் அந்த நவீன ஆடு இறைச்சி கூடத்திற்கு மிக அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவைப்படக்கூடிய குடிநீரை நவீன ஆடு இறைச்சி கட்டிடத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்படுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாகவும்மேலும் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக பலமுறை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தும் ,மனு அளித்தும், கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆடு இறைச்சி வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தினம்தோறும் வெட்டப்படும் ஒவ்வொரு ஆட்டிற்கும் நகராட்சி சார்பாக பணம் வசூலிக்கப்படும் நிலையில் எங்களுக்கு தேவையான கட்டிட வசதியும், குடிநீர் வசதியும் கழிவுநீர் கால்வாயும் அமைத்து தருவதற்கு நகராட்சி நிர்வாகம் அலைக்கழித்து வருவதாக புலம்புகின்றனர்
மேலும் மீண்டும் கட்டிடத்தின் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு இறைச்சி வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்