மிக சரியாக செய்தார் கனிமொழி! உலக பயணம் குறித்து தமிழிசை பாராட்டு!

மிக சரியாக செய்தார் கனிமொழி! உலக பயணம் குறித்து தமிழிசை பாராட்டு!

ஜி.கே.சேகரன்,

உலக நாடுகளுக்கு அனுப்பி இந்தியாவைப் பற்றி பேச வைத்தவர் மோடி. அதை மிக சரியாக செய்தார் கனிமொழி, ஊழல் அதிகரித்து வருவதால் 2026 ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்விஜய் மாணவர்களுக்கு பாராட்டி விழா எடுப்பதையும் பெண் பிள்ளைகளை கொச்சைப்படுத்தி பேசிய  வேல்முருகனை வன்மையாக கண்டிக்கிறேன்,கூட்டணி கட்சியினர் என்ன பேசினாலும் என்ன தவறு செய்தாலும் திமுக கண்டிப்பதில்லை.  திமுகவில் பொறுப்பு கொடுத்தவுடன் கமலஹாசன் மாற்று மொழிகளை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. சுயலாபத்திற்காக கமல்ஹாசன் மொழி அரசியல் செய்கிறார்டாஸ்மார்க்கிலும் திமுக பெயில் ஆகிவிட்டது, குடியாத்தத்தில் பாஜக முன்னாள்  தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

  வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் ராணி அகல்யா பாய் ஹோல்கர் அவர்களின் 300 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாஜக  சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாஜக முன்னாள்  தலைவர் டாக்டர், தமிழிசை சௌந்தரராஜன் பின்பு செய்தியாளரிடம் பேசினார்.

  அப்போது அவர் குய்றிப்பிடுகையில், சகோதரர் விஜய் ஒரு நிகழ்ச்சி நடத்தி  பொது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குபவர்களை ஊக்குவிக்கிறார். அதை வேல்முருகன் அவர்கள் பெண் பிள்ளைகளை கொச்சைப்படுத்தியும் பெண் குழந்தைகளின் உணர்வுகளை புண்படுத்துவதும் அவர்களின் ஒழுக்கத்தை தவறாக சித்தரிப்பதுமாக உள்ளார்.அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  எங்களுக்கும் விஜய்க்கும் பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் மாணவிகள் அவரை அண்ணா என்று அழைப்பதை வேல்முருகன் கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது.

   கமலஹாசன் ஏதோ பெரிய தியாகி போல தமிழுக்கே அவர்தான் காப்பாளன் போல் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி முன்னிறுத்துகிறார்கள்.

  தமிழுக்கு நாங்களும் ஆதரவாளர்கள் தான் ஆனால் மற்ற மொழி பேசுபவர்கள் புண்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.  தமிழர்களும் அதைத்தான் நினைக்கிறார்கள். தமிழ் மொழி தாய் போன்றது இந்த தாய் மற்ற மொழிகளை புண்படுத்துவதை விரும்பமாட்டாள்.

  இவர்கள் மற்றவர்கள் புண்படுத்தியுள்ளனர்.  நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக உங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக திமுக உங்களுக்கு ராஜ சபா சீட் கொடுத்து விட்டார்கள் என்பதற்காக மீண்டும் மொழி அரசியல் செய்து இளைஞர்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

   இன்னும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை மத்திய அரசு தீவிரவாதத்திற்கு எதிராக உலகாமே வியக்கும் அளவில் போர் நடத்தி இருக்கிறார்.

   அதில் பொதுமக்கள் யாரும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கே பிரதமர் வழிகாட்டியாக உள்ளார் என்று உலக நாடுகள் பாராட்டியுள்ளது.

  எதற்கு எடுத்தாலும் ஸ்டாலின் மத்திய அரசை குறை சொல்கிறார் ஆனால் ஒரு மாற்றுக் கட்சி எம்பி உலக நாடுகளுக்கு அனுப்பி இந்தியாவைப் பற்றி பேச வைத்தவர் மோடி. அதை மிக சரியாக செய்தார் கனிமொழி அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

   அவர்கள் நடத்திய பொதுக்குழுவில் செந்தூர் பற்றி ஒரு பேச்சும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது எல்லாவற்றிலும் ஸ்டாலின் குறை சொல்லாதீர்கள் மத்திய அரசோடு இணக்கமாக உள்ள கேரளா முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை மாநிலத்திற்கு பெற்றுள்ளார்.

  பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை ஆடிட்டர் குருமூர்த்தி சைதை துரைசாமி அவர்களும் சந்திப்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை. ஒரு சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி உள்ளே சில பிரச்சனைகளும் இருக்கலாம், ஆனால் அந்த கட்சி பாதிக்க கூடாது என்பதினால் அவர்கள் போய் பேசி இருக்கிறார்கள்.

   குழப்பமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வரவேண்டும் வேண்டும் என்பதே எனது ஆவல்.

 டாஸ்மார்க்கில் தான் திமுக பாஸ்மார்க் வாங்குறது என்று நான் சொல்வேன் இப்போது டாஸ்மாக்கிலும் திமுக பைல் மார்க் வாங்கிவிட்டது.

 அதிலும் ஊழல் அதிகரித்துவிட்டது கல்லூரிகளில் மட்டுமல்ல மருத்துவமனையில் கூட மருத்துவர்கள் குறைபாடு உள்ளது எல்லாவற்றிலும் பற்றாக்குறையாக உள்ளது குறிப்பாக காவல்துறையில் பற்றாக்குறையாக உள்ளது.

  பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் வருத்தமளிக்கிறது இவர்கள் கும்ப மேளாவை குறை சொன்னார்கள். நேற்று பெங்களூரில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யாமல் அவசர அவசரமாக வெற்றி விழாவை கொண்டாடினார்கள் அது மிகவும் தவறானது.

  திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாநிலங்களில் என்ன நடந்தாலும் திமுக கண்டுகொள்ளாது வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என்று செய்தியாளரிடம் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.