உழவு ஊர்தியை ஓட்டிக்காட்டிய வேலூர் ஆட்சியர்!

உழவு ஊர்தியை ஓட்டிக்காட்டிய வேலூர் ஆட்சியர்!

 ஜி.கே.சேகரன்,

  பாரம்பரிய நெல் ரகங்கள் பொருட்கள் குறித்த வேளாண் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்து-  நம் நாட்டு உணவுகளை உண்டால் மட்டுமே மக்கள் உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும் என பேச்சு - உழவு ஊர்தியை மாவட்ட ஆட்சியரே ஓட்டி விவசாயிகளுக்கு  மாணியத்தில் டிராக்டர்கள் ரோட்டவேட்டர்களை வழங்கினார் - தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் ரூ,.77 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் ஆய்வக கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சியின் மூலம் துவங்கியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

  வேலூர்மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்கம் மையத்தின் சார்பில் பாரம்பரிய உயர்தர நெல் ரகங்களை பிரப்பலப்படுத்துவது குறித்து கண்காட்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் துவங்கி வைத்தார்.

  இதில் பாரம்பரிய நெல் ரகங்களான சிவனார் சம்பா,ஆத்தூர் கிச்சலி,தங்கசம்பா,துளசிசம்பா,கருடன்சம்பா,கருப்புகவுனி,மிளகு சம்பா,மாப்பிள்ளை சம்பா,பூங்கார், குள்ளங்கார்,நவரசம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் பாரம்பரிய கத்திரிக்காய் ,சிவப்பு வெண்டக்காய்,தொப்பி தக்காளி,அவரைக்காய் ஆகியவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

  இதனை விவசாயிகள் மற்றும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றிய பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் தெரிந்துகொண்டனர்.

  மேலும் இவ்விழாவில் விவசாயிகள் மாணிய விலையில் ரோட்டவேட்டர்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ,தெளிப்பான் கள் ,டிராக்டர்கள் விவசாயிகளுக்கு ஆட்சியர் வழங்கியதுடன் அவரே டிராக்டரை ஓட்டி அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

  இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் நாம் அயல்நாட்டு துரித உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் உடல் நலன் பாதிக்கும் சுகாதார சீர்கேடும் ஏற்படும் எனவே நாம் நம் இயற்கையான பாரம்பரிய உணவுகளை உட்கொண்டால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக ஒரு நிலையில் வைத்துகொள்ளலாம் என்றார்.

  முன்னதாக தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் புதியதாக ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் ஆய்வகங்களை சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.,ஸ்டாலின் திறந்து வைத்தார்

   இதனை அடுத்து வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் உள்ளிட்டோரும் திரளானோரும் பங்கேற்றனர்.