சைக்கிள் பயண பெண்:- பாராட்டிய கலெக்டர் மற்றும் டிஐஜி!

சைக்கிள் பயண பெண்:- பாராட்டிய கலெக்டர் மற்றும் டிஐஜி!

ஜி.கே.சேகரன்,

     பெண்கள் பாதுகாப்பு குறித்து சைக்கிள் பயணம் மேற்கொண்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆஷா மால்வியா வேலூர் வந்தார் அவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் டிஐஜி ஆகியோர் வரவேற்று பாராட்டினர்.

    வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஆஷா மால்வியா பல்வேறு மாநிலங்களை கடந்து சைக்கிளில் வந்தார்.

   அவர், இந்தியா முழுவதும் மேற்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

   பெண்கள் பாதுகாப்பு பெண்கள் கல்வி முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வுக்காக தனி ஒரு ஆளாக தொடர்ந்து சைக்கிளில் பயணம் செய்த அவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் அவரை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்று பாராட்டுகளையும் தெரிவித்தார்

    பின்னர் ஆஷா மால்வியா கூறுகையில் மத்திய பிரதேசத்திலிருந்து இந்தியா முழுவதும் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பெண்கள் பாதுகாப்பு முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் செல்கிறேன் 250 நாட்களில் இந்த பயணம் செல்லவுள்ளேன் இதுவரையில் 7 ஆயிரம் கிலோமீட்டர் சென்றுள்ளேன் என்று கூறினார்.

   இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய வீராங்கனை ஆஷா மாலியாவை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம். எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவருடைய விழிப்புணர்வு பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளையும் வழங்கினார்.