எல்லாவற்றையும் எங்களுக்கே அள்ளி கொடுத்துடுங்க! அடம்பிடிக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்!!

கு.அசோக்,
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரி வெளியே கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வாலாஜாபேட்டை அரசு கலைக் கல்லூரியில் 115-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரியில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தும் விதமாக 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கூறுகையில் அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தேர்வு செய்யும் முறையில் நேர்காணல் முறையை பின்பற்றுதல், மற்றும் மாநில தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது இதில் தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.