டிஐஜிக்கு பாரட்டு தெரிவித்த வியாபாரிகள்! நகைக்கடை உரிமையாளர்களுடன் எஸ்.பி. கலந்துரையாடல்!

கு.அசோக்,
வேலூர் நகரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கடந்த 15 ஆம் தேதி 15 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
திருட்டுப்போன நகைகளை டிஐஜி, ஏ.ஜி.பாபு,இ.கா.ப. அவர்களின் தலைமையிலான போலிஸ்படை ஐந்தே நாட்களில் மீட்டதோடு கொள்ளையனை கைது செய்தனர்.
பரபரப்பான இந்த கொள்ளையை உடனடியாக கண்டுபிடித்த காவல் துறைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அசரத் மக்கான் இரும்புக் கடை வியாபாரிகள் சங்கம், சண்டே மார்க்கெட் நல சங்கத்தினர், பி.டி.சி. ரோடு மரக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் டிஐஜி அவர்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஏ.எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப.வையும் சந்தித்து வாழ்த்துச் சொன்னார்கள்.
சார்பனாமேடு பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி எம்.தமிம்மரைக்காயர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனிடையே நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் வங்கி மேலாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் கொணவட்டத்தில் காவல்துறையின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வங்கி மேலாளர்கள் கூட்டுறவு வங்கி மேலாளர்கள் நகைக்கடை உரிமையாளர்கள் அடகு கடை உரிமையாளர்கள் போன்றவர்களுக்கான விழிப்புணர்வு கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணாஸி.கா.ப. பேசுகையில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
நகை கடைகளை அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் சுற்றுப்புறம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் மேலும் நகைகடையில் உள்ள ஷோ கேஸ்களை பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யாமல் அதனை முழுவதுமாக கான் கிரீட்டில் அமைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாததால் தான் பெரிய பெரிய நகைகடையில் சுவற்றில் துளையிட்டு கொள்ளைகள் நடக்கிறது மேலும் வங்கி மற்றும் நகைகடைகளில் உள்ள அலாரம் முறையாக செயல்படுகிறதா என அதனை முறையாக சரிபார்த்து விழிப்புடன் இருந்தால் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும் என்று பேசினார்.