ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தி சாதித்த மாணவர்கள்!

ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தி சாதித்த மாணவர்கள்!

கு.அசோக்,

அரசு கல்லூரி தங்கும் விடுதியின் காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் மீண்டும் அவரையே அங்கு நியமனம் செய்ய கோரி மாணவர்கள்  வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 வேலூர் மாவட்டம், வேலூர் ஓட்டேரி சேலையில் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி உள்ளது.

 இதன் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் நூற்றுகணக்கான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

  அங்கு விடுதியின் காப்பாளராக சண்முகம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

 சண்முகம் மாணவர்களுக்கு தரமாக உணவு வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் விடுதியையும் தூய்மையாக பராமரித்தார் என மாணவர்கள் நம்புகிறார்கள்.

 மேலும் சில மாணவர்களின் கல்விக்காக உதவிகள் செய்து வந்தார்.

 இந்நிலையில் திடீரென ஆதிதிராவிடர் நலத்துறை அவரை பணியிடை நீக்கம் செய்து வேறு இடத்திற்கு பணிமாறுதல் வழங்க நடவடிக்கை எடுத்தது.

  இதனை அறிந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்

  மாணவர் நலனில் அக்கறை காட்டும் அதே காப்பாளர் சண்முகத்தை மீண்டும் பணியமர்துமாறு கேட்டுக் கொண்டு அளித்தனர்.

  பின்னர் அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் விடுதிக்கு அதே காப்பாளரை நியமிப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

சபாஷ்,