சீறி பாய்ந்த 500 காளைகள்!

கு.அசோக்,
மாங்குப்பம் கிராமத்தில் களைகட்டிய எருது விடும் மயிலார் திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து ஓடியது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மாங்குப்பம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் திருவிழாவை நடைபெற்றது. அதை முன்னிட்டு 45-ஆம் ஆண்டு மயிலார் எருது விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த எருது விடும் திருவிழாவில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 500- க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது.
அவை கால்நடை மருத்துவர்களால் பரிசோதித்து தேர்வு செய்யப்பட்டு ஓடுதளத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
வெற்றி பெற்ற காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 90 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 62 பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் நடைபெற்ற மயிலாடு எருது விடும் திருவிழாவில் உள்ளூர் பகுதியின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்த்து கண்டு ரசித்தனர்.