நீங்க வந்ததே எங்களுக்கு தெரியாது? அடுத்து எங்கே போறிங்க கொஞ்சம் சொல்லுங்க? லோக்கல் எம்.எல்.ஏ.அதிகாரிகளிடம் கோரிக்கை!

நீங்க வந்ததே எங்களுக்கு தெரியாது? அடுத்து எங்கே போறிங்க கொஞ்சம் சொல்லுங்க? லோக்கல் எம்.எல்.ஏ.அதிகாரிகளிடம் கோரிக்கை!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்வுள்ள நிலையில், அதிகாரிகள் விழா பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.  அப்போது அங்கு தம் படையுடன் ஓடோடி வந்த லோக்கல் எம் .எல் .ஏ. கார்த்திகேயன் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க சார் என்று கோரிக்கை வைத்தார்.

  வேலூர்மாவட்டம்,தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 29 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவிட்டு பின்னர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை பிற்பகலில் திறந்து வைக்கிறார்.

  இதன் பின்பு கோட்டை மைதானத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார், இதற்கான பணிகள் குறித்து ஐ.பி.எஸ் காவல்துறை அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கோட்டை வெளிமைதானம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

   பின்னர் சுற்றுலா மாளிகையிலும் ஆய்வு செய்தனர், அப்போது அவருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

   அப்போது அங்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்த எம்.எல்.ஏ. கார்த்திகேயன் சார் நீங்க வந்ததே எங்களுக்கு தெரியாதுங்க, அடுத்து எங்க பொறீங்க கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் வர்ரோம் என்று கோரிக்கை வைத்தார். (அப்படின்னா முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டில் எப்படி மெத்தனமாக இருக்கிறார்கள் பாருங்கள்).

 பின்னர் முதல்வர் விழாவுக்கான ஏற்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டமும் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது இதில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.