போராட்டம் என்கிற பெயரில் மக்களை ஏமாற்றிய அரசு அலுவலர்கள்!

போராட்டம் என்கிற பெயரில் மக்களை ஏமாற்றிய அரசு அலுவலர்கள்!

 ஜி.கே.சேகரன்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின் பாதிப்பை தடுக்க விதிகளை திருத்தி துணை வட்டாட்சியர்கள் பதவி இறக்கத்தை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புகார்கள் என கூறி மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்ட 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக  வருவாய்த்துறை அலுவலர்கள்  தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் - ஆட்சியர் அலுவலகத்தில் வெறிச்சோடிய அலுவலகங்கள் - மக்கள் பாதிப்பு

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகங்களில்  தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் செய்தனர்.

 200-க்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்ததால் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.

 சி.ஆர் ஏ பரிந்துரையின்படி சிறப்புத்துறையாக வருவாய்த்துறையை அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பாதிப்பு ஏற்படாமல் துணை ஆட்சியர்களை பதவியிறக்கம் செய்ய கூடாது புகார்கள் என்ற பெயரில் மாவட்ட விட்டு மாவட்டம் மாறுதல் செய்ய கூடாது துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல் 2019-2022 உடனடியாக வெளியிட்டு பதவி உயர்வு அளிக்க வேண்டும்,

   இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், முதுநிலை பட்டியல் குளறுபடிகளை களைய வேண்டும்,

  முது நிலை வருவாய் ஆய்வாளர் பட்டியல் வெளியீட்டிற்கு கால நிர்ணயம் செய்து வெளியிட வேண்டும் துணை ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்வாக பணியிடங்களில் இல்லாதவற்றை திரும்ப பெற்று இருப்பவைகளை தொடர வேண்டும்,

  தேர்தல் ஆணைய நிரந்த பணியாளர்கள் இல்லாததால் கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து 211 வருவாய்த்துறை ஊழியர்களும் அலுவலர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அலுவலகங்கள் ஆட்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

 இந்த போராட்டத்தால் பணிகள் எதுவும் நடக்வில்லை, ஆகவே பொது பெரிதும் பாதிக்கப்பட்டனர்'

 "ச்சே... அரசு ஊழியர்களாகட்டும், அலுவலர்களாகட்டும் எந்த காலத்துல மக்கள் நலனில் அக்கறையாக இருந்திருக்கிறார்கள்".