முன்னாள் காதலனுடன் கூட்டு! கணவனை வெட்டிய பத்தினி!

முன்னாள் காதலனுடன் கூட்டு! கணவனை வெட்டிய பத்தினி!

 க.முகிலன்,

 முன்னாள் காதலனுடன் கூட்டு வைத்து கணவனை வெட்டிய பத்தினியை போலிசா சிறையில் அடைத்தனர் செத்துவிட்டதாக நினைத்து சென்றதால் கூட்டுச்சதி அம்பலம்.

இதுபற்றி விவரம் வருமாறு,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (27). இவர் அதே ஊரைச் சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நேற்றிரவு மொடையூர் சங்கராபரணி ஆற்று பாலத்தின் கீழ் கழுத்தறுபட்டு ஆபத்தான நிலையில் கிடந்த சத்யராஜை பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே செஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யராஜிடம் போலீசார் விசாரிக்க முற்பட்டபோது அவருக்கு பேச்சு வரவில்லை.

 இதனால் பேப்பர், பேனாவை கொடுத்து அவரிடம் எழுத்து பூர்வமாக வாக்குமூலம் வாங்கினர். அதில் சத்யராஜ், அவரது மனைவி சசிகலா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ஜான்(25) ஆகியோர் தான் தன்னை கொல்ல முயன்றதாக கூறியிருந்தார்.

 இந்த வாக்கு மூலத்தைப் பற்றி அறியாமல் மருத்துவமனைக்கு வந்த சத்யராஜின் காதல் மனைவி சசிகலாவை மருத்துவமனையிலேயே வைத்து போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

  மேலும் தப்பியோடிய கள்ளக்காதலன் ஜானை அவருடைய செல்போன் எண்ணை டிராக் செய்தபோது ஓசூருக்கு தப்பி செல்ல திருவண்ணாமலை அரசு பேருந்தில் பயணித்த அவனையும் அமுக்கினர்.

  சசிகலா 8 வருடங்களாக சத்யராஜை காதலித்து வந்துள்ளார். அதேபோல சத்யராஜை திருமணம் செய்துகொள்ளும் முன்பு 3 ஆண்டுகளாக ஜானையும் காதலித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு போரையும் காதலித்து வந்த சசிகலாவுக்கு கடந்த ஆண்டுக்கு முன்பு சத்யராஜுடன் திருமணம் நடந்துள்ளது.

 ஆனால், திருமணத்துக்கு பிறகும் ஜானுடன் சசிகலாமுறவு வைத்து வந்துள்ளார். சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். அதேபோல, ஜான் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

   இந்நிலையில், அடிக்கடி கிராமத்திற்கு வரும் ஜான் சசிகலாவுடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வது வழக்கம்.

   இந்த விவகாரம் சத்யராஜுக்கு தெரிந்து சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் சத்யராஜை தீர்த்துக்கட்டிவிட்டு நிம்மதியாக கள்ளக்காதலை தொடரலாம் என்று நினைத்த இருவரும் நேற்று கொலை செய்ய திட்டமிட்டனர்.

 அவர்கள் திட்டபடி, சென்னையில் இருந்த சத்யராஜை ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார் சசிகலா. உடனே ஆசை மனைவியை காண சத்யராஜ் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளார்.

  பின்னர் நாட்டார்மங்கலம் பகுதிக்கு வந்த சத்யராஜை சசிகலா சந்தித்து அங்கிருந்து ஒன்றாக இருவரும் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

   சரியாக மொடையூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கணவனுடன் சண்டை போடுவதை போல நடித்த சசிகலா வண்டியை விட்டு இறங்கி கோபித்துக் கொண்டு ஆற்றுப் பாலத்தின் அடியில் சென்றுள்ளார்.

மனைவியை சமாதானப்படுத்த சென்ற சத்யராஜ் அங்கு கள்ளக்காதலன் ஜான் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது, சசிகலா கணவர் சத்யராஜை பிடித்துக் கொள்ள கள்ளக்காதலன் ஜான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யராஜின் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளார். இதனால் சத்யராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

   சத்யராஜ் இறந்துவிட்டதாக நினைத்து அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

  அவரது முனகல் சத்தத்தை கேட்டு புதுமக்கள் அவரை காப்பாற்றியதன் பேரில் சதி திட்டம் அம்பலமாகிவிட்டது.

 தற்போது சசிகலாவும் கள்ளக்காதலன் ஜானும் சிறையில் அடைக்கப்பட்டனர்.