நியாய விலைகடை முறைகேடை கண்டுபிடித்த கலெக்டர் காயத்ரி!

க.பாலகுரு,

 திருவாரூர் வட்டம், அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

  அனைத்து நியாயவிலைக்கடையில் எடை இயந்திரம் சரியாக இயங்குதிறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்.

  அதில் தண்டலை ஊராட்சி, விளமல் பகுதியில் இயங்கிவரும் நியாய விலைக்கடையில் புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ.26 ஆயிரத்து 250 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, வட்டாட்சியர் நக்கீரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.