சுங்கச்சாவடிகளை மூடும் திட்டம் மத்திய அரசுக்கு கிடையாது! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

சுங்கச்சாவடிகளை மூடும் திட்டம் மத்திய அரசுக்கு கிடையாது! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

ஜி.கே.சேகரன்,

மத்திய அரசின் சுங்கச்சாவடிகள் மூடும் திட்டம் எதுவும் கிடையாது மத்திய அரசு திட்டவட்டமாக கடிதம் அனுப்பியுள்ளது - தமிழகத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அதிக அளவில் பணிகள் நடந்து வருகிறது கடந்த ஆட்சியில் விட்டு சென்ற பணிகளையும் நாங்கள் தான் செய்தோம் - வேலூரில் 150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

 வேலூர்மாவட்டம்,வேலூரில் புதியதாக பழைய அரசு மருத்துவமனை இருந்த இடத்தில் ரூ.150 கோடியில் பல் நோக்கு அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வேலூர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன்,வில்வநாதன், உள்ளிட்டோரும்  அதிகாரிகளுடனும் ஆய்வு மேற்கொண்டார்.

   பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் அரசு பல் நோக்கு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் அறுவை சிகிச்சை மையங்கள் 11 உடன் இங்கே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.   

   ஒரு காலத்தில் புகழ் பெற்ற மருத்துவமனை இந்த வேலூர் அரசு மருத்துவமனை.  புதுப்பிக்கப்பட்ட இம்மருத்துவமனையை தமிழக முதல்வரை கொண்டு திறப்பு விழா செய்ய தேதி கேட்டுள்ளோம்.

  மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி எதனையுமே தர மறுக்கிறார்கள் என்ன அவர்கள் அப்பன் வீட்டு காசா தருகிறார்கள். தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி மூலம் செல்லும் பணம் தான் அது.

  குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இரண்டு புயல்கள் தமிழகத்தை தாக்கியது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் வந்தார் பார்வையிட்டார் ஆனால் நமக்கு இதுவரையில் நிதியை வழங்கவில்லை தர வேண்டிய நிதியை அவர்கள் ஒழுங்காக தருவதில்லை.

  சேர்க்காடு அரசு மருத்துவமனை கட்டிகொண்டிருக்கின்றனர் பணிகள் முடிந்த பிறகு திறக்கப்படும்.

  தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு அது குறித்து நான் பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டேன், அவர்கள் தற்போது தான் கடிதம் அனுப்பி இருக்கின்றனர் சுங்கச்சாவடி முடிவு என்பது கிடையாது அவர்கள் வசூல் செய்யும் பணம் சாலைகளை பராமரிக்கவும் மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

  இனி சுங்கச்சாவடி முடிவு என்பதே கிடையாது  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது அதனை நான் சட்டமன்றத்தில் பதிலாக சொல்லிவிட்டேன்.

  ஒன்றிய அரசாங்கம் எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை.

 தற்போது புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிப்பது குறித்து நாளை சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்யவுள்ளார், அவர் முடிவு எடுப்பார்.  இருப்பினும் மருத்துவர்கள் இம்மருத்துவமனையையும் சேர்த்து கவணிப்பார்கள்.

  வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கும் திட்டம் இல்லை. காரணம் கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. சி.எம்.சி மருத்துவமனையின் அருகே சுரங்கப்பாதை அமைக்க அவர்களிடம் இடம் கேட்டுள்ளோம் அவர்களுடன் பேசி வருகிறோம்.

  மருத்துவமனைக்கு நிதி போதுமான என்பது கிடையாது நிதி தேவைபட்டுகொண்டே இருக்கும், தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு துறை ஒரு கண் கல்வித்துறை ஒரு கண் என சொல்லியுள்ளார்.

 இந்த இரண்டு துறைக்கும் தாராளமாக செலவு செய்வார் ஏற்கனவே கடந்த ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கிவிட்டு சென்றுவிட்டனர்.

 ஆனால் நிலங்கள் கையகப்படுத்தபடவில்லை அனுகு சாலையும் அமைக்க திட்டமிடவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பாலம் 35 பாலங்கள் முடித்துவிட்டோம் மேலும் 32 ரயில்வே பாலம் முடியும் தருவாயில் உள்ளது.

 நாங்கள் வந்த பின்னர் 10 ரயில்வே பாலங்கள் அறிவித்தோம், அந்த பாலங்கள் எல்லாம் நிறைவடைந்த நிலையில் உள்ளது புதிய பால திட்டங்களுக்கு 85 சதவிகிதம் நிலம் கையப்படுத்திய பின்னர் தான் டெண்டர் விடவேண்டும் என்று சொன்னார்.

 வேலூரில் புறவழி சாலை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 13. 40 கிலோமீட்டர் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடக்க இருக்கிறது, அதில் 3 பாலங்களும் அமையும் நில எடுப்பு முடிக்கப்பட்டு இந்த ஆண்டே பணிகளை கட்டாயம் துவங்கிவிடுவோம்.

 பிரம்மபுரம் - சத்துவாச்சாரி வரையில் ரூ.100 கோடிக்கு பாலாற்றின் மேம்பால பணிகள் நடந்து வருகிறது என சொன்னார்.