விக்கிரம ராஜா புதிய வணிகர் சங்கம் உருவாக்க நான் தான் காரணம்!அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

ஜி.கே.சேகரன்,
விக்கிரம ராஜா புதிய வணிகர் சங்கம் உருவாக்க காரணம் நான் தான் திருப்பத்தூரில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு..
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் இன்று நடைப்பெற்ற வர்த்தக சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்று, புதியதாக பதவியேற்ற வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்பொழுது பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு.விக்ரமராஜா சங்கம் உருவாகுவதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களுக்கு நானும் ஒருவன், வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற வர்த்தக சங்கத்தினர் அதிமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அப்பொழுது சட்டமன்ற எதிர்க்கட்சியில் நான் அவர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பினேன் அப்பொழுது சட்டப்பேரவை தலைவர் என்னை காவலர்கள் மூலம் வெளியேற்றினார்கள் என்னுடன் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் வெளியேற்றினார்கள்.
அது சட்டமன்ற உறுப்பினர் அவைக்குறிப்பில் இன்றும் இருக்கிறது, அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து வந்த தேர்தலில் வெள்ளையன் தலைமையிலான வர்த்தக சங்கத்தினர் நடுநிலையாக செயல்படுவதாக அறிவித்தனர் அப்பொழுது நான் வெள்ளையனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.
உங்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன் நடுநிலை வகிக்கிறீர்கள் என்று கேட்டேன், அதனை தொடர்ந்து 2006 இல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் நான் உணவுத்துறை அமைச்சராக இருக்கும் பொழுது வெள்ளையன் என்னிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தா£.
அப்பொழுது அவர்களுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகள் இருந்தது, வெள்ளையன் கோரிக்கையை நான் செய்து கொடுத்தப்பின்னர் தான் விக்ரம ராஜா புதிய சங்கம் உருவாக்க காரணம் என பேசினார்.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி மற்றும், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.