8 கோடி 70 லட்சம் ரூபாய் பணிகள் - 52 நரிக்குறவர்களுக்கு எஸ்.டி சான்றிதழ் - அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்!

8 கோடி 70 லட்சம் ரூபாய் பணிகள் - 52 நரிக்குறவர்களுக்கு எஸ்.டி சான்றிதழ் - அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்!

 ஜி.கே.சேகரன்,

 பல்துறை பயனாளிகளுக்கு சுமார் 8 கோடி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் வழங்கினார். மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக 52 நரிக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பால்னாங்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் திருமண வளாகத்தில் பல்துறை பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி இராண்டே சாட்சி என்கிற தலைப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  இந்த விழாவில் வருவாய் துறை, வேளாண்மை, பொறியியல் துறை, மின்சார துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 18 துறைகளைச் சார்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன், தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, தாட்கோ நிதியில் டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 31,152 பயனாளிகளுக்கு சுமார் 8 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  வழங்கப்பட்டன.

  மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து பத்து நாட்களில் வருவாய் கோட்டாட்சியரின் தீவிர ஆய்விற்கு பின்பு  52 நரிக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

 அதனைத்தொடர்ந்து 21 பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக துறை சார்ந்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.