ரொட்டித் துண்டுக்கு அல்லாடிக் கொண்டிருகும் இன வெறி இலங்கை! ஏன் இந்த பஞ்சம் முழு விவரம்!!

ரொட்டித் துண்டுக்கு அல்லாடிக் கொண்டிருகும் இன வெறி இலங்கை! ஏன் இந்த பஞ்சம் முழு விவரம்!!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

   உலகெங்குக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை மக்களுக்காக பரிதாபப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம் மக்களை பொருளாதார சிக்கலில் சிக்கவைத்த இன வெறியர் ராஜபக்சேவையும், அவரது சகாக்களையும் கடித்துக் குதறும் கோபத்தில் உள்ளனர் .

 தமிழன் என்று பிரித்துப் பார்த்து இன வெறியாட்டம் போட்ட அந்த ரத்தக்காட்டேறியின் ஆட்சியில் இலங்கை மக்கள் இன்று ரொட்டித் துண்டுக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  நெஞ்சுரமும், இரக்க குணம், மனிதநேயம் கொண்ட தமிழர்கள் இன்று அந்த மக்களுக்காக பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறனர்.

   இந்திய அரசு சார்பில் 7,500 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. (இது அமெரிக்க அளவில் 100 டாலர்கள் ஆகும்.)    அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே இந்திய நிதியமைச்சரை சந்தித்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

  இதற்கு எந்த தமிழரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சிங்கள இன வெறியர் ஆட்சியில் தமிழர்களுக்கு கொத்து குண்டு சாவு,  சிங்கள மக்களுக்கு பட்டினி சாவை ராஜபக்சே டீம் அளித்துக் கொண்டிருக்கிறது.

   புத்தர் என்கிற பெயரை பெற்ற  அசோகர் அவர்கள் சக்ரவர்த்தியாக பிறந்து மாபெரும் போரை எதிர் கொண்டார். அதனால் ஏற்ப்பட்ட சீரழிவுகளால் தெளிவு பெற்று புத்தர் ஆனார்.

  ஆனால் அவர் துவக்கிய புத்த மதத்தை தழுவி வாழ்வதாக கூறி கொண்டு புத்த பிட்ச்சுகளின் பேச்சை கேட்டு இனவெறி, மதவெறி கொண்டு இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், இலங்கை தற்பொழுது மாபெரும் பொருளாதார பேரழிவில் சிக்கியிருக்கிறது.

  நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலை கொள்ளாமல் இனவெறி, மதவெறியை மட்டுமே ஊட்டி வளர்த்ததன் பலனை இன்று இலங்கை அறுவடை செய்கிறது,

  புலிகள் மட்டும் இல்லையென்றால் இலங்கை உலகின் முதல் வல்லரசாக இருக்கும் என்று சொன்னவர்களும் வீதிகளில் உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்.

 இப்ப அங்க புலிகள் இல்லை, ஆனால் இலங்கை எரிகிறது. பௌத்த பேரினவாதத்தின் செல்லப்பிள்ளையான ராஜபக்சேவை பதவி விலக சொல்லி இலங்கை மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.

ஏன் இந்த பொருளாதார நெருக்கடி!

  இலங்கையில் ஏன் இந்த பொருளாதார நெருக்கடி என்பதற்கு இதுவே காரணம், அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.87. தற்போது போர் காரணமாக பொருளாதார தடையை எதிர்கொண்டு இருக்கும் ரஷ்யாவின் ருபேல் மதிப்பு 104.. ஆனால் எந்த போரையும், உள்நாட்டு மோதலையும் எதிர்கொள்ளாத இலங்கை ரூபாயின் மதிப்பு 264.44?

 இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ந்துள்ளது. 1970ல் இலங்கையில் நிலவிய பஞ்சத்தை விட மிக மோசமான பஞ்சமாக இது பார்க்கப்படுகிறது.

  இலங்கை பொருளாதாரம் கொரோனாவிற்கு பின்பாகத்தான் வீழ்ச்சி அடைகிறது என்றும் கூட சொல் முடியாது. ஏனென்றால் கடந்த 4 வருடமாகவே,. அதாவது கொரோனாவிற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தது.

 கடன் £ரானாக்கிய சீனா.

 சீனாவிடம் வாங்கிய கடன், சீனாவின் பல்வேறு ரோட் அண்ட் பெல்ட் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிதி உதவிகள், அதற்கான வட்டி எல்லாமே இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டது.

  அதன்பின் வந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றது.

 உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், சுற்றுலாத்துறையை கணிசமாக நம்பி இருக்கும் இலங்கை படுமோசமான வீழ்ச்சியை சந்தித்தது.

   அதிலும் டாலருக்கு நிகரான இலங்கையின் ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டே சென்றது. கடந்த வருடம் 190 ஐ தாண்டிய இலங்கை ரூபாய் மதிப்பு இப்போது 26 ரூபாயை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

 இலங்கை ரிசர் வங்கி

  இலங்கை நாட்டு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி இதை சரிப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்தும் எதுவும் அந்த நாட்டுக்கு உதவிகரமாக அமையவில்லை.

   அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது.

 விர்ர்...தங்கம் விலை

  ரஷ்ய போர் காரணமாக இன்னொரு பக்கம் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல் டீசல் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 154,566 ரூபாயாக உள்ளது. இந்தியாவில் இன்று இதன் விலை 53,020 ரூபாய் ஆகும்.

 எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் விலை அங்கே ஏறிவிட்டது. இதனால் அங்கு நிலக்கரி தட்டுப்பாடும், அதை விலையும் உயர்ந்து கடுமையான மின் தடை பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.

 விலைபட்டியல்

இலங்கையின் விலைபட்டியல் மிடில் கிளாஸ் மக்களை மட்டுமல்ல, பணக்கார மக்களையே கலக்கம் அடைய செய்திருக்கிறது.  

 ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாய் ஆகும். 1 கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய்க்கு ஆகும். கோழி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய். முட்டை ஒன்று 40 ரூபாய். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 450 ரூபாய். தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 900 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

 அதிபர் பதவி விலக போராட்டம்,

இந்த விலைவாசி உயர்வு காரணமாகவும், வேலைவாய்ப்பு இன்மையாலும் தலைநகர் கொழும்பில் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

  இலங்கையின் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை எதிர்த்தும் அவர்களின் குடும்பங்களை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வருகின்றன, பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி  அங்கு தொடங்கிய போராட்டம் அங்கு பெரிய மக்கள் புரட்சியாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  முக்கியமாக பிரதமர் அலுவலகம் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி அங்கு போராட்டம் செய்து வருகின்றனர். அதிபர், பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களை செய்து வருகின்றனர். பல லட்சம் பேர் அங்கு கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றன.

  ஒரு குச்சியில் இரண்டு பக்கமும் கருகிய பிரட்டை வைத்து போராட்டம் செய்வது இங்கே போராட்ட அடையாளமாகவே மாறியுள்ளது.

 பொருளாதாரம் மீது கவனம் செலுத்தாமல் மத - இனவாதம் மீது கவனம் செலுத்தியதே இந்த சரிவிற்கு முக்கிய காரணம் என்று பொருளாதார மேதைகள் விமர்சனம் செய்துள்ளார். வெகுஜனத்தின் வாழ்வாதார- பொருளாதார மேம்பாடுகளை விட்டு, இன-மத உணர்வு தூண்டுதலை மட்டுமே பிரதானமென ஒரு அரசு இயங்கினால் இந்நிலையை தவிர்க்கவே முடியாது என்பதற்கு, இலங்கையின் தற்போதைய சூழல் ஓர் எச்சரிக்கை

 இலங்கையில் உள்நாட்டு போர் நிலவிய போதும், அதற்கு பின்பாகவும் பெரும்பாலும் இனவாதம்தான் அதிக கவனம் பெற்றது. மக்கள் பிரச்சனைகளை பிரச்சாரத்தில் தலைவர்கள் பேசவே இல்லை. ராஜபக்சே குடும்பம் அதிலும் மீண்டும் ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வர இன வாத ரீதியான பிரச்சாரங்கள் காரணமாக இருந்தது.

 மக்களும் பொருளாதார திட்டங்களை பற்றி யோசிக்காமல் அங்கு இன வாதத்திற்கு வாக்களித்ததன் விளைவு, அவர்கள் ரொட்டிக்கும், தக்காளிக்கும் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்கள்.