இராணிப்பேட்டையில் விஸ்வநாதன் ஐ.பி.எஸ்.! கட்டிடங்களை விரைந்து முடிக்க அறிவுரை!

கு.அசோக்,
மாவட்ட முதன்மை காவல் அலுவலகத்தை வீட்டு வசதி வாரிய காவல் துறை இயக்குனர் விஸ்வநாதன் இ£ர்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ,ரூபாய் 18 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் காவலர்கள் குடியிருப்புகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காவல் துறை இயக்குனர் விஸ்வநாதன் இ.கா.ப. அவர்கள் காவல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் இ.கா.ப. மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் இடத்தினையும் பார்வையிட்டு இது தொடர்பாக அதிகாரிகளுடன் வெகு விரைவாக பணிகள் தீவிர முடிக்க வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.