திமுக தலைவரை எதிர்த்து திமுக எம். எல். ஏ. மறுமகள் ஆர்பாட்டம்!

ஜி.கே.சேகரன்,
ஆலங்காய ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுகவினரிடையே பிரச்சணை வெளிநடப்பு உள்ளிருப்பு போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது,அப்போது நிர்வாகத்தில் சங்கீதாவின் கணவர் பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன் ஆகியோர் தலையிட்டு நிர்வாகம் செய்து வருவதாகவும், கடந்த ஓராண்டில் நடைபெற்ற திட்ட பணிகள் குறித்து கவுன்சிலர்களை எந்த திட்டப்பணி ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களின் உரிமை பரிக்கப்பட்டுகிறது என தெரிவித்தனர், அதே போல் ஒன்றிய குழு தலைவரின் கணவர் பாரி என்பவர், பணிகளை நாங்கள் தான் செய்வோம் என்று சொல்லி வருவதால் திமுகவை சேர்ந்த காயத்ரி,சதாசிவம்,பிரீத்தா,லட்சுமி,சிகாமணி,முருகன்,6 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் கூட்ட அரங்கில் அமர்ந்து திமுக ஒன்றிய குழு தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான தேவராஜ் மருமகளான காயத்ரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
திமுகவினரை எதிர்த்து திமுகவினரே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தனர்