கோரிக்கைகளை பட்டியலிட்ட கிராம ஊழியர் சங்கத்தினர்!

கோரிக்கைகளை பட்டியலிட்ட கிராம ஊழியர் சங்கத்தினர்!

கு.அசோக்,

   பழைய ஓய்வூதியம் மீண்டும் அளிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்ய வேண்டும், கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு ஓய்வுபெறும் போது 50 சதவிகித பணபலனை வழங்க வேண்டும், பதவி உயர்வு ஆண்டுகள் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென சோளிங்கரில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் கொண்டு இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது.

  இந்த மாநாடு சோளிங்கர் வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

 இதில் வட்டத் துணைத் தலைவர்கள் நந்தன்,வேணுகோபால், வட்டச் செயலாளர்கள் பரந்தாமன்,தயாளன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

 இந்த வட்ட மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச்செயலாளர் ரவி,மாநில துணைத் தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  இந்த வட்ட மாநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை ஆறு ஆண்டுகளாக குறைக்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு ஓய்வு பெறுகின்ற போது பணப்பலணை 50சதவீதம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப வேண்டும்,ஓட்டுநர் பதவி உயர்வு வழங்க வேண்டும் ,போனஸ் நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.