தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் நடவடிக்கை எடுக்க  வேண்டுமாம்!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் நடவடிக்கை எடுக்க  வேண்டுமாம்!

 டி.முகமது இர்பான்,

 ஆட்சி அமைக்கும்  அரசியல் கட்சி,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  சமத்துவப்படை கட்சியின் மா.செ. பொறியாளர் பொன்.குணசீலன் என்பவர் கருத்து தெரித்துள்ளார்.

அவரது கருத்து பற்றின விவரம் வருமாறு,

 தேர்தலின் போது  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவேன்... இதை நிறைவேற்றுவேன்.... என பல்வேறு வாக்குறுதிகளை  அள்ளி வீசி மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஓட்டை பறிக்கிறார்கள். அப்படி ஓட்டு பெற்று ஜெயித்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கடந்து போகிறார்கள்.

   அப்படிப்பட்டவர்கள் மறு தேர்தலில் நிற்க தடை விதிக்கும் வகையில் புதியதாக சட்டம் ஏன் இயற்ற கூடாது?

 மக்களை ஏமாற்றி ஓட்டு  வாங்கி வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனால் அது குற்றம் என தனி சட்டத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

  பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களின் அடிப்படை உரிமையான ஓட்டினை ஏமாற்றி வாங்குவது சட்டப்படி குற்றம் என உறுதிபடுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தவுடன்  நிறைவேற்ற வேண்டும்.

   ஆட்சி பொறுப்பேற்கும் கட்சி ஷெடியூல்  படி  வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் அரசை பதவி விலக சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

 சமீபகாலங்களில் ஓட்டிற்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை தவறான பாதைக்கு இட்டுச்சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக வாக்காளர்கள் என்கிற மீன்களுக்கு ஆசை என்கிற தூண்டிலை வீசி பறிக்கிறார்கள்.

 இதனால் ஏமாற்றப்படுவது மக்கள் தான்.  மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் செயல் படுத்த முடியாத  நிலை தெரிந்தும்

சில திட்டங்களை பொய்யாக  கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் இது சட்டப்படியும் ஜனநாயக படியும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என கருதவேண்டும்! 

 அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வகையில் ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்து மக்களை ஏமாற்றும் கட்சிகளாக மாறிவருவதற்கு தடைக்கல் போட வேண்டும் என்கிறார் அவர்.