ஜெயலலிதாவின் தேர்தல் வாகனத்தில் சுற்றிவரும் வி.கே.சசிகலா!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
ஜெயலலிதா பயன்படுத்திய தேர்தல் பரப்புரை வாகனத்தில் சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் திருமதி வி.கே.சசிகலா.
முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 53 வது குருபூஜை நாளை சனிக்கிழமை 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆகவே, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வுகளுக்கு அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் எந்தெந்த நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று லிஸ்ட் போடப்பட்டு அரசு சார்பில் வ்வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பகுளம் மருதுபாண்டியர் சிலை களுக்கு மாலை அணிவிப்பதற்காக சசிகலா வந்தார். அப்போது அவர் ஜெயலலிதா பயன்படுத்திய தேர்தல் பிரச்சார வாகனத்தை பயன்படுத்தினார். அந்த வாகனத்தில் அ.தி.மு.க கட்சி கொடி பறந்தது.
முன்னதாக அவர் கோரிப்பாளையத்துக்கு வந்தபோது சசிகலாவின் வாகனம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டு பக்கம் உள்ள தேவர் சிலைக்கு சென்றதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் அமமுகவினர் ஏராளமானோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர்.
சசிகலா சற்று சோர்வாக காணப்பட்டாலும், அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துக் கொண்டு பம்பரமாக சுழன்றார். அதற்கு அங்கு குவிந்த தொண்டர்களின் எண்ணிக்கையே காரணம்.