மெகா சைஸ் "கொரோனா ஊசி டிராமா"வை ரசித்த கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,
காட்பாடியில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு கலைப்பயணம் இரண்டு நாட்கள் பயணத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கிவைத்தார்.
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அக்சிலியம் கல்லூரி நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவிகளின் சார்பாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கலைப்பயணம் இரண்டு நாட்கள் நடத்துகிறார்கள்.
இக்கலைப்பயணத்தை காங்கேயநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
இந்த கலைப்பயணம் காட்பாடி ரயில் நிலையம் தண்டளம் கிருஷ்ணாபுரம் ,அடுக்கம்பாறை,கணியம்பாடி, அனைக்கட்டு,குடியாத்தம்,கேவிக்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், போன்ற அம்சங்கள் நாடகங்களின் மூலம் நடித்து காட்டப்பட்டது.
இதில் கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி, நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.