பிஸி....ஆட்சியர்!

பிஸி....ஆட்சியர்!

 த.நெல்சன்,

  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் தீயணைப்பு சாதனங்களை மாற்றும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும்  நடைப்பெற்றது.

   இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ரா.க.கவிதா, தேர்தல் வட்டாட்சியர் திரு.சரவணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

   வேலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் பணிபுரிய உள்ள முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு பணி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில்  தொடங்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திரு.முனுசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் திரு.இராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அங்குலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆப., அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் திரு. ஆர். ரவிகுமார், மற்றும் துணை பதிவாளர் (பால்வளம்) திரு.மு.விஸ்வேஸ்வரன் மற்றும் ஆவின் அலுவலர்கள் மற்றும் பால்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.