ஓ.பி.எஸ். சொந்த வீட்டில் அண்ணாமலை!

ஓ.பி.எஸ். சொந்த வீட்டில் அண்ணாமலை!

 எம்.ரபிக் ராஜா,

  முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னிர் செல்வம் அவர்களின் தாயார் கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

   இந்நிலையில் ஓ.பி.எஸ். அவர்கள் முப்பது நாட்கள் துக்கம் அனுஷ்டித்து வருகிறார்.

  அவருக்கு அ.தி.மு.க.வினரை தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் சொல்லிவருகிறார்கள்.

  குறிப்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் ஓ.பி.எஸ். அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

 அந்த வகையில், ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் பெரிய குளம் வந்துமாறுதல் தெரிவித்துவிட்டு சென்றனர்.

  அப்படியிருக்க தற்போது பெரியகுளம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தாயார் மறைவினையொட்டி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் இன்று ஓபிஎஸ் அவர்கள் இல்லத்தில் நேரில் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.