2000-ம் பேருக்கு பட்டா!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா-சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர், கந்திலி ஒன்றிய குழு தலைவர், மற்றும் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு நத்தம் பட்டா 603 பேருக்கு, இ பட்டா 368 பேருக்கும், நகர நிலவரி பட்டா 501 பேருக்கும் மொத்தம் 1512 பேருக்கு 7.40 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டா வழங்கப்பட்டது .
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி நிகழ்வின் தொடர்ச்சியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 1512 பயனாளிகளுக்கு ரூ.7.40 கோடி மதிப்பிலான பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் ஆம்பு+ர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இன்று (04.03.2024) திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி நிகழ்வின் தொடர்ச்சியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 1512 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 40 இலட்சத்து 31 ஆயிரத்து 754ஃ- மதிப்பிலான நத்தம் பட்டா, இ-பட்டா, நகர நிலவரி பட்டா ஆகிய பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் ஆம்பு+ர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:-
இன்றைய தினம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று 3 வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற மூன்று வருடங்களில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது. ஒரு மாநிலத்தை வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமல்ல, உலகமே பாராட்டுகின்ற அளவிற்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூபாய் 7.5 இலட்சம் கோடி முதலீடுகள் பெற்று தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் வலுவான நிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் மாநில பொருளாதாரம் வளர்ச்சியும் ஏழை எளிய மக்களின் பொருளாதார வளர்ச்சியும் சமமாக இருக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களின் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சி என்று, அறிவிக்கின்ற திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, பிறக்கின்ற குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமான அரசை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இலவச பேருந்து பயணம், குழந்தைகளுக்காக காலை உணவு திட்டம், போன்ற திட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் மூலமாக உலகத்திற்கு முன்னோடி திட்டமாக திகழ்கிறது. அதேபோல் இலவச பேருந்து பயணம் பல மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னோடி மாநிலமாக மாற்றுகின்ற அதே வேளையில், ஏழை எளிய மக்களின் நலன் முக்கியம் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தான் இந்த மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் அவர்கள் இந்த மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கருதி திருப்பத்தூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாக அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசு செயல்படுத்துகின்ற அனைத்து திட்டங்களையும் பெற்று பயனடைந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களிடத்தில் மக்களை நோக்கி இத்தகைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்ற உதாரணமாக இந்த மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல்வேறு துறைகளின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை நோக்கி மக்கள் இருக்கும் இடத்திலேயே வழங்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதில் அரசின் இயந்திரம் மக்களை நோக்கி செல்வதை எடுத்துக்காட்டாக காட்டி இருக்கிறது. அந்த வகையில் இம்மாபெரும் பட்டா வழங்கும் விழாவில் 1512 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 40 இலட்சத்து 31 ஆயிரத்து 754 மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் மேம்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.இராஜசேகரன், திருமதி.ஹஜித்தாபேகம், நகரமன்ற தலைவர் திருமதி.சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் திருமதி.விஜயா அருணாச்சலம், திருமதி.திருமதி திருமுருகன், திருமதி.சத்யா சதீஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.