அதிமுகவினருக்கு ரோஷம் வரவேண்டும்:-அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
பிரதமர் மத்திய அரசு கொண்டு வரும் கொண்டு திட்டங்களை தமிழக அரசு தடுப்பதாக கூறுவது எந்தெந்த திட்டங்களை நாங்கள் தடுக்கிறோம் என அவர் விரிவாக சொன்னால் அனைத்திற்கும் பதில் தர தயார் -பாஜகவினர் ஜெயலலிதா மற்றும் எம்,ஜி.ஆர் படங்களை போட்டு ஆதரவு திரட்டுவது குறித்து அதிமுகவினருக்கு தான் ரோஷம் வரவேண்டும் அவர்களே அமைதியாக இருக்கிறார்கள் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக அரசின் சார்பில் 584 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். அவர் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் குறிப்பிடுகையில், ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.
அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம். இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.
உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும் என்றார்.
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார்,அமுலு, ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாஜகவினர் அவர்கள் திட்டங்களை நாங்கள் நிறுத்தியதாக கூறுகிறார், ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்களா நிறுத்தினோம் நாங்கள் நிறுத்தவில்லை எங்கள் மீது பழி சொல்வது சரியில்லை.
எல்லா திட்டத்தையும் நாங்கள் தடுப்பதாக கூறுவது பொய். ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள்? எங்களுக்கு திட்டங்களுக்கு தர வேண்டிய பணத்தையே தருவதில்லை. பாஜக எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ரோஷம் வர வேண்டியது அதிமுகவுக்கு தான். தொகுதி உடன்பாடு திமுக கூட்டணியில் இன்னும் இரண்டொரு நாளில் முடிவு எட்டப்படும் மோடி திமுகவை தாக்கி பேசுவது எல்லாம் அரசியல் என கூறினார்.