திமுக அரசால் காவல் துறை அசிங்கம் படுகிறது:- வேலூர் திருப்பத்தூரில் அதிமுகவினர் ஆர்பாட்டம்!
ஜி.கே.சேகரன்,
கையாளகாத திமுக அரசால் காவல் துறை அசிங்கம் பட்டு கொண்டு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆர்பாட்டத்தின் போது குற்றம் சாட்டி பேசினார்.
தமிழகமெங்கும் அதிமுகவினர் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூர்மாவட்டம்,
வேலூ£, சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வேலழகன், மாநகர செயலாளர் அப்பு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, அமைப்பு செயலாளர் ராமு உள்ளிட்ட திரளான அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைபொருட்கள் சர்வசாதாரணமாக நடமாட்டம் உள்ளது. இதனால் இளைஞர்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கடுமையாக பாதிக்கபடுகின்றனர்.
எனவே திமுக அரசு போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தவறியதை கண்டித்தும் இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க கோரி திரளான அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, அமைப்பு செயலாளர் ராமு உள்ளிட்ட திரளான அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பள்ளி கல்லூரி மாணாக்கர்களை சீர் அழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவிர திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் வீரமணி, மு.கஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதியாக டாஸ்மாக் கடைகளை மூடவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால் இதுவரை டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மற்றும் எடப்பாடியார் தமிழகத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர் எனவும் தற்போது கையாளகாத திமுக அரசால் காவல் துறை அசிங்கம் பட்டு கொண்டு இருக்கிறது என திமுக மீது கடும் விமர்சனம் செய்தார்.