அய்யா எங்களுக்கு வாழ்க்கை கொடுங்க சாமி!

அய்யா எங்களுக்கு வாழ்க்கை கொடுங்க சாமி!

 டி.முகமது இர்பான்,

அய்யா எங்களுக்கு வாழ்க்கை கொடுங்க சாமி! என்று தமிழகத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.

 தமிழக அரசு பள்ளிகளில், 2012ம் ஆண்டு, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் பாடங்களில், 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டு, 10 கல்வி ஆண்டுகள் கடந்த விட்டன. தற்போது, 12 ஆயிரத்து, 483 பேர் ரூபாய் பத்தாயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர்.

    மேற்படி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை காரணமாக, கற்பித்தல் மற்றும் அலுவலக பணிக்களுக்கு யன்படுத்தப்படுவதுநடைமுறையாக உள்ளது.

  இந்நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியமே வழங்கப்படுகிறது. ஆகவே தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தொழில் கல்வி ஆசிரியர்கள், நிரந்தரம் செய்ததை போலவே பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்த்தோம். பணி நிரந்தரம் செய்வோம்' என பள்ளிக்கல்வி அமைச்சரும் பேட்டியில் கூறியுள்ளார். பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு, பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு வாழ்க்கை அளிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்¢.