இஸ்லாமியர்களுக்கு கலைஞர் பலதிட்டங்களை வழங்கியுள்ளார்:-ரூ7 கோடி திட்டங்களை வழங்கி பேசிய அமைச்சர் எ.வ.வேலு!

ம.பா.கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமியா பெண்கள் கல்லூரியில் பல்வேறு துறைகளின் சார்பில் 713 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 15 இலட்சத்து 58 ஆயிரத்து 760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களான மக்களைத்தேடி மருத்துவம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து சலுகை, இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார் என மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பெருமிதம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமியா பெண்கள் கல்லூரியில் பல்வேறு துறைகளின் சார்பில் 713 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 15 இலட்சத்து 58 ஆயிரத்து 760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.அ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன் ஆகியோர்கள் முன்னிலையில் இன்று (21.10.2022) வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
நமது இந்திய சுதந்திரத்திற்காக நிறைய போராட்ட தியாகிகள் தங்களது உயிரினை தியாகம் செய்துள்ளனர். ஆனால் முதல் முதலாக 1806 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நம்ம ஊரை சேர்ந்த இஸ்லாமிய மற்றும் இந்து சகோதரர்கள் திப்பு சுல்தான் அடைக்கப்பட்ட கோட்டையின் பிரிட்டிஷ் படையில் இருந்தார்கள். அப்பொழுது பிரிட்டிஷர்கள் எந்த ஒரு அடையாளமும் இருக்கக் கூடாது என ஆணையிட்டார்கள் மற்றும் அவர்கள் கொடுக்கின்ற தொப்பி மற்றும் சீருடை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். நமது நாட்டினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இரு மதத்தினரும் ஒன்றாக கூடி பேசினார்கள்.
அவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று முடிவு செய்து முதல் முதலாக 1806 ஆம் ஆண்டு போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பிரிட்டிஷாரை ஓட ஓட விரட்டிய நாடு தான் நமது வட ஆற்காடு என்று சொன்னால் மிகை ஆகாது. இந்தப் போராட்டம் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது. மேலும் இந்தப் போராட்டத்தை சிப்பாய் புரட்சி என்று அழைத்தார்கள். இந்த போராட்டத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்று சேர இருந்தார்கள் அந்த வகையில் மதத்தை காப்பாற்றவும், சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.கலைஞர் அவர்கள் முதல் முதலாக 1973 ஆம் ஆண்டு உருது பேசும் இஸ்லாமிய பெருமக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார், மேலும் 2005 ஆம் ஆண்டு உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கி, முதல் முதலாக 2005 ஆம் ஆண்டு தர்காக்களில் பணிபுரியவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஏற்பாடு செய்யப்பட்டதும், 2001 ஆம் ஆண்டு மணிமண்டபம் கட்டியதும், 2007 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு, இஸ்லாமிய பொருளாதாரக் கல்வி மேம்பாட்டிற்காக தனி இயக்குனர் நியமிக்கப்பட்டதும், 2008 ஆம் ஆண்டு சீராபுராணத்தை இயற்றிய உமறுப்புலருக்கு எட்டயபுரத்தில் அமுத கவி என்ற மணி மண்டபம் கட்டியதும், 2009 ஆம் ஆண்டுஉலமாக்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் உருவாக்கி உதவிட வேண்டும் என்று சொன்னதும் போன்ற பல்வேறு திட்டங்களை இஸ்லாமியர்களுக்கு மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.கலைஞர் அவர்கள் தான்.
மேலும், இஸ்லாமிய பெருமக்களின் பெரும் உழைப்பு மற்றும் ஒத்துழைப்பால் அறக்கட்டளையின் மூலமாக வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி நடைபெறுவதை உளமாற பாராட்டுகிறேன். இந்த காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியாக இருந்தாலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் முதல் இடம் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறார்கள். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்கள் என மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 300 உலமாக்களுக்கு ரூ.15.49 இலட்சம் மதிப்பில் மிதிவண்டிகள், வருவாய்த்துறையின் சார்பில் 202 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 109 நபர்களுக்கு ரூ.2.6077 கோடி மதிப்பில் பண்ணை குட்டை அமைப்பதற்கான ஆணைகளையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 21 நபர்களுக்கு ரூ.50.40 இலட்சம் மதிப்பில் வீடுகளும், 30 பயனாளிகளுக்கு ரூ.3.60 இலட்சம் மதிப்பில் முதியோர் உதவி தொகை, 10 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பில் சாலை விபத்து நிவாரண தொகை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.647 கோடி மதிப்பிலும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு ரூ.94,176/- மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.2.875 இலட்சம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.8,378/- மதிப்பிலும், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துறையின் சார்பில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைபடுத்தும் திட்டத்தில் 1 நபருக்கு ரூ.4.60 இலட்சம் மதிப்பிலும், மருத்துவத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.12,500/- மதிப்பில் என மொத்தம் 713 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 15 இலட்சத்து 58 ஆயிரத்து 760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, துணை இயக்குநர் (வேளாண்மை) திரு.பச்சையப்பன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திருமதி.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத்தலைவர் திரு.எஸ்.இராஜேந்திரன், வாணியம்பாடி நகரமன்ற தலைவர் திருமதி.உமா பாய், ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி.சத்யா, திருமதி.சங்கீதா, திரு.சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.கவிதா தண்டபாணி, வாணியம்பாடி நகர கூட்டுறவு சங்க தலைவர் திரு.சாரதி, வட்டாட்சியர்கள் திரு.சம்பத், திரு.சிவபிரகாசம், திருமதி.மஹாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ஆனந்தகிருஷ்ணன், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் திரு.காசி அகமது, முதல்வர் டாக்டர்.எம்.ரேணு, நகராட்சி ஆணையாளர் திருமதி.மாரிசெல்வி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.