பொருட்காட்சி தாஜ்மகாலை ரசித்துப் பார்த்த அமைச்சர் துரைமுருகன்!

கு.அசோக்,
வேலூரில் தனியார் பொருட் காட்சியை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் கொரோனா விதிகளை பின்பற்றாததாலும் கொரோனா வேகமாக பரவும் அபாயம் - சத்துவாச்சாரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒரே பகுதியில் 7 பேருக்கு கொரோனா மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்தினை தெளித்தனர்.
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை மைதானத்தில் தனியார் பொருட்காட்சியான அமைக்கப்பட்டுள்ளது இதில் தஜ்மகால் வடிவமைப்பு மற்றும் செங்கோட்டை வடிவமைப்பு மற்றும் தற்படம் எடுக்க பல்வேறு போஸ்டர் படங்களும் இடம் பெற்றுள்ளது. தாஜ்மகால் அமைப்பை அமைச்சர் ரசித்துப் பார்த்தார்.
மேலும் பொதுமக்கள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென தனியார் பொருட்காட்சியின் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
ஆனால் மக்கள் யாரும் கொரோனா விதிகளை கடைபிடிக்கவில்லை சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை முகக்கவசம் அணியவில்லை.
இந்த பொருட்காட்சியினை நீர் வளத்துறை அமைச்சர்
துரைமுருகன் திறந்து வைத்தார், இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில் மக்கள் சரியாக முகக்கவசத்தை யாரும் அணியாததால் கொரோனா வேகமாகவும் பரவும் அபாயமும் தொற்று எணிக்கை உயரும் அபாயமும் ஏற்பட்டது
இதனிடையே சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா வந்ததால் அந்த வீடுகளுக்கு கிருமி நாசினி மருந்தடிக்கும் வேலையை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும், மோர்தானா இரண்டு கால்வாய்கள் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அவைகள் தூர்வாரப்பட்டால் காங்குப்பம் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர்மாவட்டம்,கேவிக்குப்பம் அருகேயுள்ள காங்குப்பம் கிராமத்தில் ரூ.15.26 லட்சம் செலவில் புதிய கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் அவரது குடியிருப்பு ஆகியவைகள் திறப்பு விழாவானது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இந்த பகுதியில் குடிநீர் தட்டுபாடு உள்ளது இதனை போக்க வேண்டும் அதற்காக மோர்தான இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் இந்த நிதியாண்டில் தூர்வாருவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அவ்வாறு அந்த கால்வாய்களை தூர்வாரப்பட்டால் காங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தட்டுபாடு நீங்கிவிடும் என்று பேசினார்.
இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.