காவல் நிலையம் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீப் மீது கல்வீச்சு பதற்றம்!

எம்.ரபிக்ராஜா,
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த தினம் உள்நாடு மட்டுமின்றி அயல் நாடுகளிலும், கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் கல்வீச்சு மற்றும் காவல் நிலையத்தில் ரகளை என்று ஒரே களேபரமாக முடிந்தது.
இது பற்றின விவரம் வருமாறு,
தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த முழு திருவுருவ வெண்கல சிலைக்கு அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்படியிருக்க நேற்றிரவு 9 மணி அளவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த பெரியகுளம் தென்கரை பகுதியின் ஒரு பகுதி மக்களும் ஜி. கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த மக்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வந்தபோது யார் முந்தி மரியாதை செலுத்துவது என அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக வெடித்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோதலை கட்டுப்படுத்த முயன்று முடியாமல் போனதால் லேசாக தடியடி நடத்தினர்.
இதனால் சிதறி ஓடிய கும்பல் போகிற போக்கில் காவல்துறையினர் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தியதோடு காவல் நிலையம் புகுந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், இன்ஸ்பெக்டர் ஜீப் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு அரசு பேருந்து கண்ணாடி ஆகியவற்றை அடித்து உடைத்தனர்.
சுதாரித்துக் கொண்ட காவல் துறை போலிஸ்படையை குவித்து, அம்பேத்கர் சிலை முன்பாக இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தியதுடன், கலவரத்தில் ஈடுபட்டு காவல் துறையினர் மீது கண்டறிந்து தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை பிடித்தனர் பலரை தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரீப் உள்ளிடோர் கல் எரிந்து தாக்குதல் நடத்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் காவல் வாகனங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பு:- மேற்படி சம்பவம் பெரியகுளம் டி1 காவல் நிலையத்துக்குட்பட்ட இடத்தில் நடந்தது.மேலும் இதே ஸ்டேஷனில் கல் எரிந்து தாக்குதல் மற்றும் காவலர்கள் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் இது இரண்டாவது முறையாக நடந்ததாம்.
அப்படின்னா போலிஸ் கவனிப்பு சரியில்லை போலும்,