மரம் - AC -திருடு போன விவகாரம்:- ஒன்றியகுழு தலைவரை கண்டித்த அ.தி.மு.க!

ஜி.கே.சேகரன்,
வாலாஜா பி.டி.ஓ. அலுவலக வளாகத்திலிருந்த சுமார் பத்து டன் எடையுள்ள பலதரப்பட்ட மரங்களை ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட் என்பவர் வெட்டி செங்கல் சூளைக்கு பயன்படுத்திக் கொண்டார் என்பது அதிமுகவினருடைய குற்றச்சாட்டு. மேற்படி தலைவர் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த மரம் திருட்டு விவகாரம் ஓரிரு செய்தி தாள்களில் வெளியானது. பின்னர் அ.தி.மு.க.வின் வாலாஜா ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
இந்த ராதாகிருஷ்ணனும், மரம் திருடு குற்றச்சாட்டுக்கு ஆளான தலைவரும் கிளாஸ் மேட்டாம். அதனால் புகாரை நீர்த்துப்போக செய்ய முயற்சிகள் நடந்ததாம்.
மேற்படி ஒன்றியக்குழு தலைவர் அரசுக்கு சொந்தமான தையல் மெஷின் மற்றும் ஏ.சி.யை கூட கழற்றிக் கொண்டு போய்விட்டாராம்.
இதனிடையே இந்த மரம் திருடு தொடர்பாக அதிமுக தலைமையின் தலையீட்டின் பேரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து சேஷா வெங்கட்டிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நிர்வாகத்தை நடத்துவது பிடிஓ தான் நீங்க அவர் கிட்ட கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.