பஸ்ஸை நிறுத்திய வேலூர் கலெக்டர்! என்ன செய்தார் பாருங்க!

ஜி.கே.சேகரன்,
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த கலைநிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது, அப்போது மக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம்,வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
மேலும் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் சென்று இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பஸ் பஸ்களில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
மேலும் பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் ,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பழைய பஸ் நிலையத்தில் ஆந்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள அலங்கார் ஓட்டல் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.இதனால் பழைய பஸ் நிலையத்திற்குள் செல்லும் வழியில் அதிக அளவு நெரிசல் ஏற்பட்டது. இதனை கண்காணித்த ஆட்சியர் பிரபல ஓட்டல் முன்பு இது போன்ற வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனால் ஓட்டல் முன்பு இருந்த வாகனங்களை போலீசார் தற்காலிகமாக அப்புறப்படுத்தினர்.
ஆட்சியர் உத்தரவிட்டதும் வாகனங்களை அகற்றுவது போல நடித்த போலிசார், ஆட்சியரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ச்சியாக அங்கு கண்காணித்து பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கும் அந்த ஓட்டல் நிர்வாகத்தினரை கொட்டி வைக்க வேண்டும் என்று கோருகிறார்கள் வேலூர் வாசிகள்.