தூத்துக்குடி காவல் துறையில் சோக நிகழ்வு!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் அலுவலர்கள் அகால மரணம் அடைந்தனர். அவர்களது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இது பற்றின விவரம் வருமாறு,
புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மோகன் அவர்கள் சாலை விபத்தில் நேற்று காலமானார் - அன்னாரது உடலுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தலைமை காவலர் மோகன் (43) அவர்கள், நேற்று (12.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் மீளவிட்டான் 4-ம் கேட் அருகே வந்துகொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி கிழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் சில்வர்புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அன்னாரது உடலுக்கு இன்று (13.03.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜசுந்தர், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாஸ்கரன் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார் - அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் (53) அவர்கள், இன்று காலை (13.03.2024) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அன்னாரது உடல் வைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஷேக் அப்துல்காதர் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இவர்களது மறைவு தூத்துக்குடி காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.