தமிழக பையனுடன் எஸ்கேப் ஆன வடமாநில பெண்! திருமணம் செய்து கொண்டதால் சொத்துகள் எழுதி வாங்கப்பட்டது! சார் பதிவாளர் ஆபிசில் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
கடந்த சனிக்கிழமை நவ.25 ஆம் தேதியன்று நமது அலுவலக தொலைபேசிக்கு வந்த ஒரு அழைப்பில் பெண் குரல் பதறியது, அலறியது. எங்களை கொல்லப் போகிறார்கள் ஊடகத்துறையினர்தான் காப்பாற்ற வேண்டும் என்றது அந்த குரல். இது போல பல ஊடகவியலாளர்களுக்கு அவர் போன் செய்திருக்கிறார்.
விசாரித்த போது பெயர் சேத்தனா என்றும் அவரது தந்தை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடைபஜார் பகுதியைச் சேர் சுமிர் சிங், என்பது தெரியவந்தது. இந்த குடும்பம் வட இந்தியர்கள், ஆனால் அவர்கள் வாணியம்பாடியில் குடியேறி நீண்டகாலமாக வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்த பெண்ணும், வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் ரிஷிகாந்த்தும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காதலனுக்கு அவரது பெற்றோர் மற்றும் செட்டியப்பனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் ஆதரவாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியிருக்க வீட்டைவிட்டு வெளியேறிய அந்த பெண் காதலனுடன் கைகோர்த்து பதிவு திருமணம் செய்துகொண்டார்களாம்.
இது ஒருபக்கம் இருக்க பெண் தரப்பில், மகள் காணவில்லை என்று போலிசில் புகார் அளிக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் மூலம் தேடினர். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் திருவண்ணாமலை எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்களை பாதுகாத்த போலிசார் உடனடியாக திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்துக்கு இன்டிமேஷன் கொடுத்திருக்கிறார்கள். அதன் பேரில் திருப்பத்தூரிலிருந்து இரண்டு போலிசாரை திருவண்ணாமலைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் அதற்குள் காதல் ஜோடி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது.
இந்நிலையில் தான் மீடியாக்களுக்கு போன் செய்திருக்கிறது காதல் ஜோடி. உடனே இந்த தகவல் திருப்பத்தூர் எஸ்.பி.அலுவலக தனிப்பிரிவுக்கு தெரியவந்ததும், அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். பின்னர் அந்த காதல் ஜோடி வாணியம்பாடி டிஸ்பி அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள்.
மகள் காணவில்லை என்று போலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சரணடைந்த பெண்ணிடம் போலிசார் விசாரித்த போது, அவர்கள் மேஜர் என்பதாலும், ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதாலும், நான் காதல் கணவனுடன் தான் செல்வேன் என்று திட்டவட்டமாக பெண் சொல்லிவிட்டார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் பெற்றோரிடம் கழற்றி கொடுத்துவிட்டார்.
இதில் இன்னொறு முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த பெண்ணின் மீது அவரது தந்தை சில சொத்துக்களை எழுதிவைத்திருந்துள்ளார். வாணியம்பாடி மற்றும் வடமாநிலத்திலும் இருந்த அந்த சொத்துக்கள் முழுவதையும் பவர் எழுதி வாங்கிக்கொண்டாராம். அதற்காக சனிக்கிழமை ஸ்பெஷலாக வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுகள் நடந்ததாக கூறப்படுகிறது.
என்னதான் பிரச்சனைக்கு முற்றுபுள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் காதலர்கள் தரப்பில் இன்னமும் அச்சம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறதாம். அந்த அளவுக்கு சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறதாம்.