தாய் தமிழக உறவுகளுக் நன்றி சொன்ன பிரபாகரனின் மகள்? மாவீர தினத்தில் உரை!

ம.பா.கெஜராஜ்,
தமிழீழம் கோரி போராடி வந்த விடுதலைபுலிகள் இயக்கத்தினர் ஆண்டு தோறும் நவம்பர் 27 மாவீரர் நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம். இலங்கையில் விடுதலைபுலிகள் இயக்கத்தில் இருந்து வீரமரணம் அடைந்தவர்கள் என அவர்களுக்காக கடைபிடிக்கப்படும் நாளாகவே இதை தொடர்ந்தனர். இந்த தினத்தில் அதன் தலைவர் பிரபாகரன் வானொளியில் உரை நிகழ்த்துவார் அது மிகவும் பிரபலம்.
சமீப ஆண்டுகளாக அந்த குரலை கேட்க முடிவதில்லை. இந்நிலையில் தமிழீழ தலைவர் பிரபாகரன் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி நேற்று மாவீரன் தினத்தில் வெளியாகி இருக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில் பேசிய அவர், "எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின் உங்களை நான் சந்திக்கிறேன். தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் ன்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது."
"ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என்று கூறி எந்த நாடும் இதுவரை உதவவில்லை. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்.
ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது."
"தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக் நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை.
தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சிலட்சியம் மாறாது," என்று பேசியிருக்கிறார் துவாரகா.
அப்படி இந்த வீடியோவில் பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா என்று கேள்விகள் எழுந்துக் கொண்டிருக்கின்றன.