சாமை அல்வா இடம் பெற்ற கண்காட்சி! ஆட்சியர் துவக்கம்!

ஜி.கே. சேகரன்,
வேலூரில் பாரம்பரிய உணவுகள் குறித்து கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் வளர் இளம் பெண்கள் குழந்தைகளும் சத்தாண பாரம்பரிய உணவுகள் உண்ணுவதன் அவசியம் குறித்து பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தா£.¢ இதில் சாமை அல்வா ,கேழ்வரகு பாயாசம்,வரகு அரிசி புட்டு,திணை லட்டு,அவல் பாயாசம்,கொள்ளு அடை ,சோள மற்றும் கேழ்வரகால் ஆன முறுக்கு உள்ளிட்டவைகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
பின்னர் மாணவர்கள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிறுதானிய பாரம்பரிய உணவுகள் குறித்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.