லோ வோல்டேஜ் பாதிப்பு:- கெட்டுபோன பாலை தரையில் ஊற்றி போராட்டம்!

ஜி.கே.சேகரன்,
நாகவேடு கிராமத்தில் மின் பொறியாளர் அலுவலகம் முன்பு அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகள் 3000 லிட்டர் பாலை தரையில் கொட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நாகவேடு பகுதியில் இயங்கி வரும் இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யும் பணியை ஆற்றி வருகிறது. அப்படியிருக்க, கடந்த சில மாதங்களாகவே குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் என தொடர்கிறது. அதே போல் அடிக்கடி காலவரையற்ற மின் நிறுத்தம் ஏற்படுவதால் விவசாயிகள், நெசவாளர்கள் ,பால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், பலமுறை இது குறித்து பல முறை மின்சார துறைக்கும் நிர்வாகத்திலும் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லையாம்.
ஆகவே உரிய நடவடிக்கை எடுக்காத இளநிலை மின் பொறியாளர் மற்றும் மின்சார துறை அதிகாரிகளை கண்டித்து நெமிலி வடக்கு ஒன்றிய பாமக செயலாளர் மாதவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டேர் கலந்து கொண்டு மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 3000 லிட்டர் கெட்டுப்போன பாலை சாலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன் மின்துறை அதிகாரியிடம் பேசினார். விவசாயிகளும், நெசவாளரும் பால் பண்ணை உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா.¢ மேலும் மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டும் மின் நிறுத்தம் உயர்மின் அழுத்தம் குறைந்த மின்னழுத்தம் இனிவரும் காலங்களில் ஏற்படுத்தக் கூடாது, சீரான மின்சாரம் வழங்க வேண்டிய அதிகாரிக்கு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இதுபோன்று பிரச்சனைகள் நீளுமானால் பாமக சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெறும் என எச்சரித்தார்.
அப்போது முன்னாள் மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட உழவர் பேரவை இயக்க செயலாளர் திருமால், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் குணா, சந்தானம், ஒன்றிய தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் சாந்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.