253 வாகனங்களை வழங்கிய முதலமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 23 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 253 வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வழங்கிடும் வகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சு.சுதாகரன் அவர்கள் வாகனத்திற்கான சாவியை பெற்றுக்கொண்டார்.
கலெக்டர் கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.தனஞ்செயன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பானுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணன், சமூக நலத்துறை அலுவலர் செல்வி.வினோலியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.ஆர்.ஓ.பதவியேற்பு
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக திருமதி த. மாலதி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.