திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆடிப்பூர தேரோட்டம்

G.Balaguru,
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் தனி கோவிலாக அமைந்துள்ள ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தின் ஆடிபூர உற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ் உற்சவத்தின் 9ம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது
தேரோட்டமானது திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி பவணிவரும் ஆழித்தேரை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
தேரோட்டத்தையொட்டி ஸ்ரீகமலாம்பிகை அம்மனின் உற்சவ மூர்த்தியான ஸ்ரீமணோண்மணி அம்பாள் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி நடவாகனத்தெரு, சன்னதி தெரு வழியாக தேர் நிலையடியான கீழ ராஜவீதியில் உள்ள தேருக்கு எழுந்தருளினார். தேரில் அம்பாளுக்கு விஷேச தீபாரதனையும், தேர் சக்கரத்திற்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட திரண்டிருந்த திரளான பக்தர்கள் ஆரூரா தியாகராஜா, ஆரூரா கமலாம்பாள் என பக்திபரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து ஆழித்தேரோடும் 4 ராஜவீதிகளிலும் வலம் வந்தனர்.