பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

க.பாலகுரு,
திருவாரூரில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் பழங்குடி இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டு கொள்ளாத பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் குகி பகுதியைச் சேர்ந்த மூன்று பழங்குடி பெண்களை நிர்வாண படுத்தி அதில் ஒரு பெண்ணின் சகோதரரை சுட்டுக்கொலை செய்து இரண்டு பெண்களை நடு ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் செய்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் இந்த சம்பவத்தை கண்டு கொள்ளாத பாஜக அரசை பதவி விலகக் கோரியும் பாஜக மோடி அரசை கண்டித்தும் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி துரைவேலன் தலைமையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உமன் சாண்டி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஷிஞிறிமி கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு பதவி விலக வேண்டும் என கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.