பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!

க.பாலகுரு,

  ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

  திருவாரூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் 24-வயது பெண் காவலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு  தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் வழங்க சென்று திருவாரூர் திரும்பினார்.

 அப்போது ஆயுதப் படையில் காவலராக பணிபுரியும் சற்குணம் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலர் புகார் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணையின் முடிவில் காவலர் சற்குணம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் காவலர் சற்குணத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  இந்த சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.