செம்மர கடத்தல்காரர்களை மடக்க முனைந்த தாதாக்கள்:-துரிதமாக பிடித்த காட்பாடி டிஎஸ்பி அண்ட் டீம்!

செம்மர கடத்தல்காரர்களை மடக்க முனைந்த தாதாக்கள்:-துரிதமாக  பிடித்த காட்பாடி டிஎஸ்பி அண்ட் டீம்!

 ஜி.கே.சேகரன், 

வாகன ஓட்டுனர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பல்  காட்பாடியில்  கைது செய்யப்பட்டனர்.

  ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் காணப்படுகின்றது. இதனை கடத்தல் கும்பல்கள் வெட்டி பல இடங்களுக்கு கடத்திச் செல்கின்றனர்.அவ்வாறு கடத்திச் செல்லப்படும் செம்மரக்கட்டைகளை ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறை மற்றும் போலீசார் அவர்களை மடக்கி கட்டைகளை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

  இந்நிலையில்அவ்வாறு  லாரிகளில் கடத்தி வரப்படும் செம்மரக்கட்டைகளை பல நபர்கள் ஒன்று சேர்ந்து லாரியை மடக்கி ஓட்டுநரை கத்தியால் வெட்டி தாக்கி விட்டு லாரியில் உள்ள செம்மரக்கட்டைகளை கடத்திச் செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதடிப்படையில்  காட்பாடி டி.எஸ்.பி.பழனி தலைமையிலான போலீசார் காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் டீமுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது காட்பாடி பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை அவர்கள் தங்கியிருந்த லாட்ஜில் மடக்கி விசாரித்தனர்.அதில்,

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற வசூல்ராஜா,வேலூர் தோட்டப்பாளையம் பகுதி சேர்ந்த சதீஷ்குமார்,காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த சையத் மான்சூர்காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதி சேர்ந்த மோகன் குமார் என்கிற வெள்ளை மோகன்,காட்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கவுஸ் பாஷாஎன தெரிய வந்தது.

  அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,செம்மரக்கட்டைகளை கடத்தி வரும் வாகன ஓட்டுனர்களை மடக்கி அவர்களை தாக்கி வெட்டிவிட்டு செம்மர கடத்தலில் ஈடுபட இருந்ததாக தெரியவந்துள்ளது.அதன் காரணமாக விருதம்பட்டு போலீசார் அவர்களை கைது செய்தனர்.

  இந்தச் சம்பவத்தில் காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் விரைந்து துரிதமாக செயல்பட்டு, வாகன ஓட்டுனர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளனர்.