தனியார் பள்ளிக்கூடங்களை அரசுடமையாக்க வேண்டும்! மாணவர்கள் வேண்டுகோள்!

தனியார் பள்ளிக்கூடங்களை அரசுடமையாக்க வேண்டும்! மாணவர்கள் வேண்டுகோள்!

 கு.அசோக்,

   பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கவும் பாலியல் கல்வி மற்றும் நீதிபோதனை வகுப்புகள் கொண்டு வரவேண்டும் அனைத்து பள்ளிகளையும் அரசுடமையாக்கி ஏற்றத்தாழ்வில்லாத இலவச கல்வியை வழங்க வேண்டும் - தொழிற்கல்வி விவசாய திறன் பயிற்சிகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளையும் பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும் - மண்டல அளவிலான மாநில கல்வி கொள்கை குறித்து வேலூரில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான கல்விகொள்கை வகுப்பது  குறித்து மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

  இதில் வேலூர்,ராணிப்பேட்டை.திருப்பத்தூர்,திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் பங்கேற்றனர்.

 இக்கூட்டம், மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்களும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள்,பள்ளி கல்லூரி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

  இக்கூட்டத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு தலைவர் நீதியரசர் முருகேசன் பேசுகையில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மாநில கல்விகொள்கை வகுப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி வருகிறது, தற்போது ஏழாவது மண்டலத்தில் இக்கூட்டமானது நடக்கிறது இறுதியாக சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு பிற்கு அரசுக்கு எங்களின் பரிந்துரைகளையும் கருத்துக்களையும் அளிக்கவுள்ளோம் குறிப்பாக மாணவர்களின் கருத்துக்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று பேசினார்.

   பின்னர் இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் பேசுகையில் அரசு பள்ளி தனியார் பள்ளி சி.பி.எஸ்.சி மெட் ரிக் என பாகுபட்டு கல்வி கொள்கை கிடக்கிறது இதனை அனைத்தையும் அனைத்து பள்ளிகளையும் அரசுடமையாக்க வேண்டும்.

   மேலும் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க வேண்டும் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த போதிய விழிப்புணர்வை மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

  செயல்முறை கற்றல் முறையை கொண்டு வரவேண்டும் விளையாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் பாலியல் குற்றங்களை தடுக்க சிறுவயது முதல் பாலியல் கல்வியும் குற்றங்களுக்கான தண்டனையும் கல்விதிட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் நீதிபோதனை வகுப்புகளும் நடத்தபட வேண்டும்,

  திறன் மேம்பாடு தொழிற்கல்வி விவசாய திறன் பயிற்சிகளையும் பள்ளியிலேயே அளிக்க வேண்டும் மேலும் தற்காப்புகலை பயிற்சி மற்றும் பாரம்பரிய தமிழர் கலைகளான சிலம்பம் உள்ளிட்டவைகளும் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

  மேலும் இரு மொழி கொள்கை மட்டுமின்றி மாணவர்கள் விரும்பும் மொழியை கற்கும் வகையில் மூன்றாவது எதாவது ஒரு மொழியை கற்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிவறை நூலகம் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளை செய்து தர வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.