கொசுக்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த கைதி!

கொசுக்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த கைதி!

ஜார்ஜ்.ரவி

கொசுவலை வேண்டி வழக்கு தொடுத்த நபர் நீதிமன்றத்துக்கு கொசுக்களை பாட்டிலில் அடைத்து வந்து நீதிபதி முன் ஆஜரானார். 

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 இந்நிலையில் சிறையில் கொசு தொல்லை இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார்.

  நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை என்று சிறையில் பிடித்த கொசுக்களை நீதிபதி முன் காண்பித்தார்.

  "என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கோரிக்கை வைத்தார்.