ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினை பார்வையிடவுள்ள மாணவர்களை ஆட்சியர் வாழ்த்தினார்!

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினை பார்வையிடவுள்ள மாணவர்களை ஆட்சியர் வாழ்த்தினார்!

ஜி.கே.சேகரன்,

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினை பார்வையிடவுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் நேரில் வாழ்த்தினார்.

   வேலூர் மாவட்டத்தில் சிறப்பு பள்ளியில் பயின்ற மாணவ,மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்ததால் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கினார் -  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான புதிய வாகனங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

  வேலூர்மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகாக சிறப்பு பள்ளியில்   பயின்ற அனைத்து மாணவ,மாணவிகளும் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றனர் அவர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார் இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

    இதே போன்று ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான புதிய வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனைக்கட்டு,குடியாத்தம்,காட்பாடி கேவிக்குப்பம்,பேர்ணாம்பட்டு,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு ஸ்கார்பியோ வாகனங்களை வழங்கினார்.

  இந்நிகழ்வில் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,திருமதி.க.ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருபூ,இராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளார்ச்சி) திரு.வெ.புருஷோத்குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் திரு.சி.பாஸ்கரன், திரு.ழிணி.சத்தியநந்தம், திரு..வேல்முருகன், திருமதி.வி. திவ்யா திருமதி..சித்ரா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  வேலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது தொடர்பான பிறத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல்  பாண்டியன்,இ.ஆ.ப அவர்கள்    ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அங்குலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 பன்னிரெண்டாம்  வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவ-மாணவியர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்  பரிசுகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அங்குலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  அரசு பள்ளி  மாணக்கர்களின் திறமைகளை மேம்படுத்தும்  ராக்கெட் சயின்ஸ் ஆன்லைன் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினை பார்வையிட  தேர்வு செய்யப்பட்டுள்ள காட்பாடி  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் செல்வன்.நிதிஷ்குமார், செல்வன். யஷ்வந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அங்குலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.