சாதாரண மக்கள் முன்னேற வேண்டும்! முன்னாள் அமைச்சர் பேச்சு!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்ட பேரளம் அருகே நியாய விலை கடை புதிய கட்டிடம் திறப்பு விழா... முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து... விற்பனையை துவக்கி வைத்தார். '
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உபய வேதாந்தபுரம் ஊராட்சி, நெடுஞ்சேரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பொது விநியோகத் திட்ட நியாய விலை கட்டிடத்தை தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.
நெடுஞ்சேரி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடை ஏற்படுத்திக் கொடுத்து.. அதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "இந்தப் பகுதி சாதாரண மக்கள் வாழ்கின்ற பகுதி இங்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் வேண்டும், குறிப்பாக கல்வியில் முன்னேற்ற வேண்டும் கல்வியில் முன்னேறினால் தான் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் போகும்" என பேசினார்..
இந்த நிகழ்வில், நன்னிலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சி.பி.ஜி அன்பு, மேனாங்குடி புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட நெடுஞ்சேரி பகுதி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.