ஒரு ஊரில் ஒருத்தருக்குகூட மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை!

உ.சசிகுமார்,
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த தினம் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பயனாளிகள் வங்கிக் வரவு வைக்கப்பட்டும் இதை வங்கிகளில், ஏடிஎம் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்'' சொல்லப்பட்டது.
இந்நிலையில், நடப்பு மாததிற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது., முறையான வங்கிக் கணக்கில்லாத 87.785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலம் அனுப்பப்பட்டுள்ளது''
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது தவணையும் பயனர்களுக்கு வரவு வைக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்காவை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து ஆட்சியரை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே, இடையாத்தூர் கிராமத்தில், 56 குடும்பங்கள் உள்ளன. தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் கிராமத்தில் உள்ள 56 குடும்ப மகளிருக்கும், ஒட்டு மொத்தமாக உரிமைத் தொகை இதுவரை வழங்கவில்லை.
எனவே அரசு தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.